𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz விவசாய இரசாயனங்ளை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவை வரவேற்கும் Pelwatte

விவசாய இரசாயனங்ளை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவை வரவேற்கும் Pelwatte

| | 0 Comments |

அதன் அண்மைய சேதனப் பசளை தயாரிப்பு வரிசையின் மூலம் விவசாயிகளுக்கு உதவவும் உறுதிபூண்டுள்ளது

இலங்கையின் பிரபல பாலுற்பத்தியாளரான Pelwatte Dairy, நாட்டில் ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பொருட்டு அடுத்த பெரும் போகத்திலிருந்து இரசாயன உரங்களை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை வரவேற்றுள்ளது.

நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க உதவும் வகையில் தனது  சேதனப் பசளை (கூட்டெரு) உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள Pelwatte Dairy Industries, ஜனாதிபதியின் முடிவானது பல சவால்களை எதிர்கொண்டுள்ள சேதனப் பசளை தொழிற்துறைகளுக்கு மேலும் ஆதரவளிக்கும் என்று நம்புகிறது.

உள்நாட்டு பாலுற்பத்தித் தொழிற்துறையின் முன்னேற்றத்தில் கணிசமாக பங்களிக்கும் ஒரு நிறுவனம் என்ற வகையில், Pelwatte பொருளாதார வளர்ச்சியிலும், முக்கியமாக பொதுமக்களின் நல்வாழ்வையும் வளர்ப்பதிலும் அரசாங்கத்துடனும் பிற பங்குதாரர்களுடனும் கைகோர்த்து செயல்பட மிகவும் ஆர்வமாக உள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு இலங்கை சந்தையில் அதன் சேதனப் பசளை தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதுடன், செயற்கை உரங்களைப் போலல்லாமல் சேதனப் பசளையானது தாவரங்களும், நுகர்வோருக்கும் அவர்களின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை பழக்கவழக்கங்களைப் பொறுத்தவரை குறைந்த பாதிப்பை ஏற்படுத்துவதை உறுதி செய்கிறது.

Pelwatteவின் புதிய சேதனப் பசளை தயாரிப்பு வரிசை தொடர்பில் கருத்து தெரிவித்த பண்ணை முகாமையாளர் சமில ராஜபக்ஸ,”Pelwatte கூட்டெருவானது, அதன் ஆரம்பத்திலிருந்து பேண்தகு உர உற்பத்தியில் முன்னோடியாக இருந்து வருவதுடன், சுற்றுச்சூழலுக்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஆதரவளிக்கிறது. இது தொடர்பில் விவசாயிகளிடமிருந்து எங்களுக்கு கிடைத்த வரவேற்பு மிக அதிகமாக உள்ளதுடன் அதிகாரிகளின் ஒப்புதல்களை அடுத்து முடியுமான இடங்களில் சுழற்சியை செயல்படுத்த நாங்கள் உறுதியாக உள்ளோம்.”

Pelwatte கூட்டெருவானது நாடு முழுவதும் உள்ள அதன் விற்பனையகங்கள் மற்றும்  விற்பனையாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட வலையமைப்பு மூலமாக விநியோகிக்கப்படுகின்றது. மேலும், இந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 30 மெட்ரிக் டொன் கூட்டெருவைத் தயாரிக்கிறது. உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy industries, சில மாதங்களுக்கு முன்பிருந்து நிலைபேறான வளர்ச்சி மற்றும் வலுவூட்டலில் ஈடுபட வேண்டும் என்ற உத்வேகத்துடன் கூட்டெரு தயாரிக்கும் தொழிற்துறையில் முன்னோடியாக உள்ளது. இந்நிறுவனம் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கி வருவதால் இயற்கையின் மீதும் சாதகமான தாக்கத்தை உருவாக்க முடியும். இந்த கூட்டெருவில் பிரதானமாக அடங்குவது பாற்பண்ணைகளில் இருந்து பெறப்பட்ட மாட்டு சாணமாகும். இதனோடு பசுக்களுக்கான தீவனக் கழிவுகள் மற்றும் மீதமானவை, தீவனம், கார்பனேற்றப்பட்ட நெல் உமி, எப்பாவளை பாறை பொஸ்பேட் மற்றும் கூட்டெருவை செழுமையானதாக்க வெளியிலிருந்து பெறப்பட்ட கோழிகளின் கழிவுகள் போன்றவற்றையும் உள்ளடக்கியது.

Pelwatte கூட்டெரு, தொழில்துறை மற்றும் திணைக்கள நியமங்களுக்கு இணைவாக தயாரிக்கப்படுவதுடன், அதன் தரத்திற்காக சான்றளிக்கப்பட்டுள்ளது. இந் நிறுவனத்தால் பல மாதங்களாக உணவு உற்பத்திகளில் இரசாயன உர பயன்பாடு மற்றும் அதன் விளைவுகளைத் தவிர்க்க முடிந்துள்ளதுடன் நிலைபேறான கழிவு முகாமைத்துவத்தினையும் ஏற்படுத்த முடிந்துள்ளது.

சேதன கூட்டெருவானது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக உள்ளதுடன், மண்ணுக்கான செழுமையாக்கியாகவும், பசளையாகவும் இருப்பதுடன், அவசியமான மட்கு அல்லது அமிலங்களை வழங்குவது முதல் மண்ணுக்கு இயற்கையான பூச்சிக்கொல்லியாக இருப்பது வரை பல வழிகளில் நிலத்துக்கும், உற்பத்திகளுக்கும் நன்மையளிக்கின்றது.

இது தொடர்பில் Pelwatte industries இன் பொது முகாமையாளர் லக்சிறி அமரதுங்க கருத்து தெரிவிக்கையில், “தொழில்துறையிலும் ஏனையோரிடையேயும் அணி உருவாக்கும் தாக்கம் தொடர்பில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இதன் தாக்கம் தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தை ஒரு பெரிய அளவில் ஆதரித்து வருகிறது, மேலும் அடர்த்தியான சந்தைகளை கூட அடைய உற்பத்தியை விரிவுபடுத்த முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,”என்றார்.

இலங்கையின் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக வறண்ட வலயத்தைச் சேர்ந்தோர், சிறுநீரக நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட காலப்பகுதியில், இந்த நிலைக்கு நீண்ட காலம் விவசாய இரசாயனங்ளை விரிவாக பயன்படுத்துவது நேரடியாக தொடர்புபட்டிருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டியமைக்கு இணங்க, விவசாயத்தில் சேதன பசளைகளை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கூட்டெரு தயாரிப்புத் திட்டம் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இரசாயன மற்றும் செயற்கை உரங்களுக்கு தடை அறிவிக்கப்பட்டதிலிருந்தே இதற்கான கேள்வி அதிகரித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ඉපැරණි දේශීය ජීවන රටාව අගයමින් ස්වදේශී කොහොඹ “මාණික්කාවත” ටෙලිනාට්‍යය සඳහා ප්‍රධාන අනුග්‍රහය දක්වයි.ඉපැරණි දේශීය ජීවන රටාව අගයමින් ස්වදේශී කොහොඹ “මාණික්කාවත” ටෙලිනාට්‍යය සඳහා ප්‍රධාන අනුග්‍රහය දක්වයි.

සාහිත්‍ය කෘතියක් වන  “මාණික්කාවත” ග්‍රන්ථය පාදක කර ගනිමින් සකස් කරන ලද තිර රචනයක් ඇසුරින් 1880 සිට 1980 දක්වා වූ සියවස සැබෑ ලෙස ප්‍රතිනිර්මාණය කරමින් එම කාල වකවානුවේ භූමිය ප්‍රමුඛ ස්වභාවික

CNCI Achiever Awards 2021 හීදී පැල්වත්ත අඛණ්ඩව වසර තුනක් විශිෂ්ටතා සම්මානයෙන් පිදුම් ලබයි.CNCI Achiever Awards 2021 හීදී පැල්වත්ත අඛණ්ඩව වසර තුනක් විශිෂ්ටතා සම්මානයෙන් පිදුම් ලබයි.

රටේ ප්‍රමුඛතම කිරි නිෂ්පාදන සන්නාමයක් වන පැල්වත්ත සමාගම ජාතික වාණිජ මණ්ඩලය (Ceylon National Chamber) විසින් සංවිධානය කරන ලද Achiever Awards හීදී අඛන්ඩව 3 වැනි වසරටත් ජයග්‍රහණයට පාත්‍රවන ලදී. වසර 20කට